சோளிங்கர், நவ.1: சோளிங்கர் அருகே பைக் மோதியதில் கூலித்தொழிலாளி இறந்தார். விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சோளிங்கர் அடுத்த பாணாவரம் அருகே உள்ள குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் கொல்லாபுரி(56), கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு அதேபகுதியில் உள்ள ஒரு கடைக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த பைக், இவர் மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கொல்லாபுரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து, பாணாவரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.