கும்பகோணம், அக். 31: கும்பகோணம் அருகே கோயிலில் இருந்து விநாயகர் சிலையை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கும்பகோணம் பஞ்சுக்கார தெரு வேம்படி தெரு சந்திப்பில் சீராட்டும் விநாயகர் கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் தனியார் பாராமரிப்பில் உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் 2015ம் ஆண்டு நடந்தது. கோயிலி அர்ச்சகராக ஜெயராமய்யரும், நிர்வாகியாக மாரிமுத்துவும் இருந்து வருகின்றனர்.இந்த கோயிலின் உள்பிரகார மாடத்தில் 2 அடி உயரமுள்ள மற்றொரு விநாயகர் கற்சிலை வைத்து வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்து கோயிலை பூட்டி சென்றனர்.நேற்று காலை பக்தர்கள் வந்து பார்த்தபோது கோயிலில் இருந்த கற்சிலை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து கும்பகோணம் மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.