க.பரமத்தி, அக்.31: கரூர் டிஎன்பிஎல் ஆலையில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.நாட்டில் ஊழலை ஒழித்திட விழிப்புணர்வினை ஏற்படுத்திடும் வகையில், நாடு முழுவதும் கடந்த அக்.28ம் தேதி முதல் நவ.2ந்தேதி வரை ஊழல் விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், காகிதபுரம் பேரூராட்சியில் இயங்கி வரும் டிஎன்பிஎல் ஆலையில் ஊழல் விழிப்புணர்வு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.