பெருந்துறை, அக்.31: தமிழ்நாடு பாஜ கட்சி இதுவரை 51 அமைப்பு மாவட்டங்களாக இருந்ததை மாற்றி 60 அமைப்பு மாவட்டங்களாக செயல்படும் என மாநில தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 40 முதல் 60க்குள் உள்ள வாக்குச் சாவடிகள் உள்ளடக்கியவை ஒரு தனி ஒன்றியமாக அறிவிக்கப்பட்டுள்ளது.முதல் ஒன்றியமாக, பெருந்துறை பேரூராட்சி, கருமாண்டி செல்லிபாளையம் பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் 38 வாக்குச்சாவடி உள்ளதை பெருந்துறை நகர் மண்டலம் எனவும். சுள்ளிப்பாளையம், துடுப்பதி, சீனாபுரம், பட்டக்காரன்பாளையம், குள்ளம்பாளையம், பொன்முடி, மூங்கில்பாளையம், கம்புளியம்பட்டி, விஜயபுரி, மேட்டுப்புதூர், கராண்டிபாளையம், பெரியவீரசங்கிலி, சின்னவீரசங்கிலி, போலநாய்க்கன்பாளையம், பாப்பம்பாளையம், வெட்டையங்கிணறு, மடத்துப்பாளையம், தோரணவாவி உள்ளிட்ட 18 கிராம ஊராட்சிகளில் உள்ள 51 வாக்குச்சாவடி பெருந்துறை தெற்கு ஒன்றியமாகவும் செயல்படும்.