பள்ளிப்பட்டு, அக். 31:ஆர்.கே.பேட்டை அரகே வீராணத்தூர் பகுதியில் மர்ம காய்ச்சலுக்கு வாலிபர் பலியாகி உள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை சில நட்களாக பெய்து வருகிறது. ஆங்காங்கே தெருக்கள் மற்றும் சாலை பள்ளங்களில் மழைநீருடன் கழிவு நீரும் குளம்போல் தேங்கியுள்ளது. மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்களில் பலர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 5 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமார் உத்தரவின்பேரில் பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் தீவிர துப்புரவு, தூய்மை மற்றும் சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருகின்றன.