சோளிங்கர், அக்.31: சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் பக்தர்களின் வசதிக்காக ரோப்கார் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். 108 வைணவ தலங்களில் ஒன்றாக விளங்கும் சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் ரோப்கார் அமைக்கும் பணிக்காக கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு 6 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் இப்பணிகள் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 2014ம் ஆண்டு மறுமதிப்பீடு செய்து 9.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பணிகள் நடைபெற்று வருகிறது.