மதுரை, அக். 27: மதுரையில் அரசு ஆதரவற்ற இல்லத்தைச் சேர்ந்த குழந்தைகளை அழைத்துச் சென்று, பிரபல ஸ்டார் ஒட்டலில் ‘பபே’ முறையில் விருந்து கொடுத்து புதுமையான முறையில் தீபாவளி கொண்டாடப்பட்டது. மதுரை மக்கள் தொடர்பு அலுவலர்கள் கூட்டமைப்பின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அன்னை சத்யா ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் 30 பேர் மற்றும் இங்குள்ள ஊழியர்கள், பிரபல ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தீபாவளியை கொண்டாடும் வகையில் இவர்களுக்கு இங்கு ‘பபே’ முறையில் சிறப்பு விருந்து தரப்பட்டது.