திருப்புத்தூர், அக்.25: மருதுபாண்டியர்களின் 218ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று திருப்புத்தூர் சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு நினைவு மண்டபத்தில் நேற்று அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.,செந்தில்நாதன், மாவட்ட அவைத்தலைவர் ஏ.வி.நாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமலிங்கம், நகர் செயலாளர் இப்ராம்ஷா, முன்னாள் யூனியன் சேர்மன் கரு.சிதம்பரம் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.திமுக சார்பில் பெரியகருப்பன் எம்எல்ஏ தலைமையில் முன்னாள் அமைச்சர் தென்னவன், முன்னாள் எம்.பி., பவானிராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகவடிவேல், மாணிக்கம், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர்கள் உதயசண்முகம், கான்முகமது, எப்.சி.எஸ்.சரவணன், முன்னாள் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பள்ளத்தூர் ரவி, நாராயணன் மாவட்ட விவசாயி தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரை சரவணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.புதூர் கண்ணன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளர் சோமசுந்தரம், உள்ளிட்ட மாவட்ட முழுவதும் இருந்து ஏராளமான திமுகவினர் கலந்துகொண்டு மருதுசகோதர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.