அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு

புதுக்கோட்டை, அக்.25: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு செய்தார். அன்னவாசல் பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு புதுக்கோட்டை சென்ற சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் அன்னவாசல் அருகே உள்ள மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்பொழுது ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் செவிலியர் பணிக்கு குறித்த நேரத்தில் வராததால் அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிக்கு பரிந்துரை செய்தார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். ஆய்வின்போது கூட்டுறவு சங்க தலைவர் ராமசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: