குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு

குளச்சல், அக்.25: ராஜாக்கமங்கலம் அன்னை காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன்  ஜெவகர்(33). இவர் நேற்று முன்தினம் குடிபோதையில் நிலவடிகுளம் தடுப்புச்சுவரில் அமர்ந்து  கொண்டு குழந்தையுடன் விளையாடி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில்  ஜெவகர் குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார்.  இதுகுறித்து அவரது தாயார் கலாவதி வெள்ளிச்சந்தை போலீசில் புகார் செய்தார். பாலீசார் உடலை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு  பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: