நாகர்கோவில், அக்.25: குமரி மாவட்டத்தில் மழைக்கு மேலும் 12 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை காணப்படுகிறது. தொடர் மழையால் அணைகள் நிரம்பி வருகின்றன. குறிப்பாக பெருஞ்சாணி அணை உச்சநீர்மட்டத்தை எட்டி வருகிறது. வெள்ள அபாய அளவான 72.05 அடியை எட்டியுள்ளது. அணைக்கு 572 கன அடி தண்ணீர் வரத்து காணப்படுகின்ற நிலையில் 861 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதனை போன்று சிற்றார் -1, சிற்றார்-2 அணைகளும் நிரம்பியுள்ளன. சிற்றார்-1ல் 16 அடியும், சிற்றார்-2ல் 16.11 அடியும் நீர்மட்டம் காணப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 33.65 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 579 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 34 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் 34 கன அடி தண்ணீர் உபரியாக திறந்துவிடப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் நேற்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.