மதுராந்தகம், அக். 25: மதுராந்தகம் நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் பிளீச்சிங் பவுடர் தூவவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.மதுராந்தகம் நகரில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கடந்த சில நாட்களாக இப்பகுதியில் பெய்து வருகிறது. இதனால், இங்குள்ள சாலைகளில் தண்ணீர் தேங்கி குளம்போல் காணப்படுகிறது.குறிப்பாக ரயில்வே ஸ்டேஷன் சாலை, கடப்பேரியில் சில தெருக்கள், மேலும் முறையாக பராமரிப்பு செய்யப்படாத குண்டும் குழியுமான சாலைகள் ஆகியவற்றில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. மேலும், சாலையோரம் இருபுறமும் உள்ள கால்வாய்களை முறையாக பராமரிக்காததால், அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதில் கொசுக்கள் உற்பத்தியாகி, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.