வாலாஜாபாத், அக். 25: வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள சார் பாதிவாளர் அலுவலகத்தை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால், அங்கு வரும் அலுவலர்களும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைந்துள்ளனர்.வாலாஜாபாத் பேரூராட்சி, 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகே சார் பதிவாளர் அலுவலகம், அரசு மாணவிகள் விடுதி, கருவூலக அலுவலகம் ஆகிய கட்டிடங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கானோர், பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், மேற்கண்ட சார்பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ள வளாகம் முழுவதும் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது. இங்கு பணிக்கு வரும் அலுவலர்களும், பல்வேறு பணிகளுக்காக வரும் பொதுமக்களும் கடும் சிரமம் அடைகின்றனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், வாலாஜாபாத் பஸ் நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் உள்பட பல்வேறு அலுவலகங்கள் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. குறிப்பாக சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தினமும் பத்திரப் பதிவு உள்பட பல்வேறு பணிகளுக்காக நூற்றுக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.