திருவண்ணாமலை, அக்.25: திருவண்ணாமலை அருகே ஒருதலைபட்சமாக செயல்படும் தலைமையாசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி வகுப்புகளை மாணவர்கள் புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை அடுத்த இனாம்காரியந்தல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கக் பள்ளியில் 186 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமையாசிரியர் விஜயலட்சுமி உட்பட 5 ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், தலைமை ஆசிரியை விஜயலட்சுமி ஒரு சில மாணவர்களிடம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதாகவும், தகாத வார்த்தையால் பேசுவதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து மாணவர்களின் பெற்றோர்கள் நேற்று காலை மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளிக்கு அருகே வகுப்புகளை புறக்கணித்து நிறுத்தி வைத்து, தலைமை ஆசிரியரை இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.