தஞ்சையில் தெலங்கானா மாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, அக். 24: தெலங்கானா மாநில போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தஞ்சை தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தஞ்சை மாவட்ட தலைவர் கோதண்டபாணி தலைமை வகித்தார். வடக்கு வட்ட தலைவர் சுப்ரமணியன் விளக்க உரையாற்றினார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளன தேசிய செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தெலங்கானாவில் பணிநீக்கம் செய்யப்பட்ட 48 ஆயிரம் தொழிலாளர்களின் பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். போராடும் தொழிற்சங்க தலைவர்களை உடனடியாக அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related Stories: