நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸ்

அந்தியூர், அக்.24:அந்தியூரில் ைகத்தறி நெசவாளர்களுக்கு தீபாவளி போனஸாக ரூ.30 லட்சம் வழங்கப்பட்டது.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் ஆலம்பாளையம், தவுட்டுப்பாளையம், பிரம்மதேசம் பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சங்கம் உள்ளது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆண்டுதோறும் தீபாவளி முன்னிட்டு போனஸ் வழங்குவது வழக்கம். இந்தாண்டுக்கான தீபாவளி போனஸையை கைத்தறி நெசவாளர்களுக்கு எம்எல்ஏ ராஜாகிருஷ்ணன் வழங்கினார். இதில், கோ-ஆப்டெக்ஸ் மாநில இயக்குனர் ரமேஷ், கூட்டுறவு சங்க தலைவர்கள் பழனிச்சாமி, மீனாட்சி சுந்தரம், சரவணன், பாலுசாமி, மனோகரன், மேலாளர் ஈஸ்வரமூர்த்தி உள்பட நெசவாளர்கள் பலர் கலந்து கொண்டனர். நெசவாளர்களுக்கு ரூ.30 லட்சம் போனஸாக வழங்கப்பட்டது.

Related Stories: