வலங்கைமான், அக்.24: வலங்கைமான் வட்டார விவசாயிகளை பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் நடப்பு சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வருகிற 30ம்தேதி கடைசி நாளாகும். இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குநர் பாலசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு உரிய இழப்பீடு பெறவும், அவர்களின் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது சம்பா, தாளடி பருவ நெற்பயிருக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டதில் கடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.