திருத்துறைப்பூண்டி, அக்.24: டெங்குவை ஒழிக்கமுடியாத தமிழக அரசு மது விற்பனைக்கு இலக்கு நிர்ணயிப்பதா என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலக்குழு உறுப்பினர் நாகராஜன் திருத்துறைப்பூண்டியில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது: தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் தீபாவளி சிறப்பு பரிசாக இந்த ஆண்டு தீபாவளி இலக்காக 385 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளது பெரும் வேதனைக்குறியதாகும். இந்த விற்பனைக்கு இலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு டாஸ்மாக் பணியாளர்களுக்கு சில சிறப்பு கட்டளைகளையும் விதித்திருப்பது கண்டனத்துக்குறியதாகும். குறிப்பாக தீபாவளி நேரத்தின்போது நேரத்துக்கு மதுக்கடைகளை திறக்கவேண்டும்.