மேல்முறையீட்டு மனுக்கள் மீது மாநில தகவல் ஆணையர் விசாரணை

கடலூர், அக். 24: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ் நேற்று விசாரணை நடத்தினார்.கடலூர் மாவட்டத்திற்கு நேற்று வந்த தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் முத்துராஜ், மேல்முறையீட்டு மனுக்களின் மீது விசாரணை நடத்தினார். மேல்முறையீட்டு விசாரணையில், 62 வழக்குகள் விசாரிக்கப்பட்டது. அனைத்து வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது. விசாரணையில், ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைபொது தகவல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: