திருச்செங்கோடு, அக்.24: திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில், சாலையோரம் கடைகளுக்கு முன் புதிதாக சாக்கடை கட்டியவர்கள், சிலாப் போட்டு மூடாததால் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் ரவுண்டானா அருகே, கிழக்குப்புற சாலையில் ஓட்டல்கள், டீ கடைகள், பேக்கரி மற்றும் ஸ்டேஷனரி கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்புறம் 10 அடி ஆழத்துக்கு புதிதாக க்கடை பாலம் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக பள்ளம் தோண்டியவர்கள், சாக்கடை கால்வாய் கட்டினர். பணிகள் முடிந்து பல மாதங்களாகியும், பள்ளத்தை மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். மேலும், கால்வாயின் மேல் பகுதியில் சிலாப் கல் போடவில்லை. திறந்த நிலையில் பெரிய கால்வாய் உள்ளதால் மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் முதியவர்கள் கடைகளுக்குள் செல்ல சிரமப்படுகின்றனர்.