ஆரணி, அக்.24: ஆரணியில் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த சுகாதார ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை, மளிகை கடை, ஓட்டல், பழக்கடை, பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் அதிகளவில் பயன்படுத்துவதாக நகராட்சி ஆணையாளருக்கு புகார் வந்தது. அதன்பேரில், சுகாதார ஆய்வாளர் குமரவேல் தலைமையில் துப்புரவு மேற்பார்வையாளர் ஜெயக்குமார் ஆகியோர் ஆரணியில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை நேற்று பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, காந்தி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கு பிளாஸ்டிக் கவர்களில் வைத்திருந்த உணவு பொருட்களை அழித்தனர். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு நகராட்சி அலுவலகத்திற்கு நடந்து சென்றனர்.