மேலூர், அக்.23: கொட்டாம்பட்டி இளைஞர்கள் இயக்கம் சார்பில் கிராம முன்னேற்ற பயிற்சி முகாம் 2 நாட்கள் கம்பூர் ஊராட்சி அலங்கம்பட்டியில் நடைபெற்றது. இதில் கம்பூர் ஊராட்சி பற்றிய ஆவணப்படம் வெளியீடு செய்யப்பட்டது.
கொட்டாம்பட்டி பகுதிகளில் பல்வேறு பொதுப்பணிகளை குழுவாக இணைந்து கிராம முன்னேற்றம் அடைவது எப்படி என்பது தொடர்பாக இந்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அலங்கம்பட்டி நாட்டாமை அடைக்கன், ஓய்வு பெற்ற லெப்டினன்ட் கர்னல் சத்தியமூர்த்தி, மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளை ஹக்கீம், பாண்டியராஜன், அலங்கம்பட்டி காத்தான் பங்கு பெற்றனர்.முதல் நாள் பயிற்சி முகாமில் ஊராட்சி சார்ந்த சட்டங்கள், பணியாளர்களின் கடமைகள், ஊராட்சி அலுவலகத்தில் கையாளப்படும் ஆவணங்கள், கணக்குகள் மற்றும் மத்திய,மாநில அரசு திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.