மதுரை, அக். 23: உள்ளாட்சி தேர்தல் பணிக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் விவரங்களை கருவூலம் பெற வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், ‘‘பாராளுமன்ற தேர்தல் பணிக்கான விவரங்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் மூலம் பெறப்பட்டன. ஆனால் பல பள்ளி மற்றும் அலுவலகங்களில் தங்களுக்கு வேண்டியவர்களின் பெயர்களை, பெயர் பட்டியலில் சேர்க்காமல் கொடுக்கப்பட்ட விவரம் பின்பு தெரிய வந்தது. இதன் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில், தேர்தல் பணியில் இருந்து விலக்கு பெற முடியாமல் உண்மையிலேயே, சரியான காரணங்கள் இருந்தும், பலர் அவதிப்பட்டனர். இன்னும் பலர் அலைக்கழிக்கப்பட்டு மன உளைச்சலுக்கு ஆனாளானர்கள்.