திருப்பூர், அக். 23: தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் இணைப்பை கைவிட வலியுறுத்தி திருப்பூரில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பி.இ.எப்.ஐ. சார்பில் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது. மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்கும் மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த வங்கிகள் இணைப்பின் மூலம் வங்கிகள் கொடுத்த கடனை திருப்ப பெற முடியாத சூழல் ஏற்படும் என கூறி வங்கிகள் இணைப்பை கைவிடவேண்டும், என பல தரப்பட்டோரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில் ஒரு பகுதியாக வங்கி ஊழியர்கள் சங்கமும் போராடி வருகிறது. இந்நிலையில் நேற்று வங்கி ஊழியர்கள் சங்கங்களின் சார்பில் வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.