புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதம்

புதுக்கோட்டை, அக். 23: தேவேந்திர குல வேளாளர் இனத்தை ஆதிதிராவிடர் பட்டியலில் இருந்து நீக்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து அரசாணை வெளியிட வேண்டுமென மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் புதிய தமிழகம் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.புதுக்கோட்டை, திலகர் திடலில் நடைபெற்ற அடையாள உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்டவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: