முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்

முத்துப்பேட்டை, அக்.23: முத்துப்பேட்டை அடுத்த மேலதொண்டியக்காடு அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வட்டார சுகாதாரத்துறை சார்பில் டெங்கு மற்றும் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இதில் அரசு மருத்துவர்அழகானந்தம், மருந்தாளுனர் தேவமணி, சுகாதார செவிலியர் வசந்தா ஆகியோர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மாணவர்களை மருத்துவ பரிசோதனை செய்தனர். இதில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: