வேலூர், அக்.23: வேலூர் மத்திய சிறையில் முருகன் தங்கிய அறையில் 2 சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் 3வது பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி சிறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், முருகன் அறையில் இருந்து செல்போன், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் முருகன் உயர் பாதுகாப்பு பிரிவில் 1வது பிளாக்கில் தனி அறைக்கு மாற்றப்பட்டார்.