காஞ்சிபுரம், அக்.23: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் சமூக விரோதிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள நீத்தார் வழிபாடு மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.காஞ்சிபுரம் நகராட்சி ஓரிக்கை பகுதியில் உதயமாங்குளம் குளக்கரையில் நீத்தார் வழிபாடு செய்யும் மண்டபம் உள்ளது. இந்த இடத்தை ஓரிக்கை, மிலிட்டரி சாலை, சின்ன அய்யங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தோர் தகனம் செய்ய பயன்படுத்துகின்றனர்.இறுதிச் சடங்கு மற்றும் வழிபாடு அருகில் உதயமாங்குளம் கரையில் உள்ள நீத்தார் வழிபாடு மண்டபத்தில் நடைபெறும். இந்த நீத்தார் வழிபாடு மண்டபத்தை ஒரு சிலர் மாட்டுத் தொழுவமாக பயன்படுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் மாடுகளை கட்டிவிட்டுச் செல்கின்றனர். இதனால் மாட்டு தொழுவமாக நீத்தார் வழிபாடு மண்டபம் மாறியுள்ளது.