நாமக்கல், அக்.18: நாமக்கல் மாவட்டத்தில், 5 தாலுகாவில் பணியாற்றிய 60 விஏஓக்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.நாமக்கல் மோகனூர் சாலையில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில், நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர் ஆகிய தாலுகாவில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடைபெற்றது. ஆர்டிஓ (பொ) பால் பிரின்ஸ்லி ராஜ்குமார் இந்த கலந்தாய்வை நடத்தினார். இதில் சிறிய கிராமங்களில் 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்த கிராம நிர்வாக அலுவலர்கள், பெரிய கிராமங்களில் ஓராண்டு பணி முடித்த கிராம நிர்வாக அலுவலர்களுக்கு, அவர்கள் விரும்பிய கிராமங்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடமாறுதல் அளிக்கப்பட்டது. இதன்படி 60 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இடமாறுதல் அளிக்கப்பட்டுள்ளது.