தேவாரம், அக்.18: தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், கோம்பை, ராயப்பன்பட்டி, ஆனைமலையன்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு ஊர்களிலும் நேற்று முன்தினம் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அணைகள், கால்வாய்கள், குளங்கள் போன்றவற்றை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன்படி வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்கள், ஆர்.ஐக்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மழையினால் விவசாய பயிர்கள் சேதம், வீடுகள் சேதம், அணைகள், கால்வாய்கள், ஆறுகளில் மழைநீரால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட கலெக்டரை தொடர்பு கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது.