திருமயம்,அக்.18: திருமயம் அருகே ஹோட்டல் நடத்தி வரும் வாலிபர் கடன் கேட்டு வருபவர்களை வித்தியாசமான வசனங்களால் திணறடித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ராயவரம் பஸ் ஸ்டாண்டு பகுதியில் ஹோட்டல் நடத்தி வருபவர் கணேசன்(26). இவர் கடந்த 5 மாதங்களாக ராயவரத்தில்ஹோட்டல் நடத்தி வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் கடன் கேட்டு வருபவர்களை சமாளிக்க முடியாமல் சில வாசகங்களை எழுதி ஹோட்டல் நுழைவாயில் முதல் அனைத்து சுவர்களிலும் ஒட்டியுள்ளார். இதனை படித்து பார்த்து சிலர் நகைச்சுவையாக சிரித்துவிட்டு செல்வதாகவும் சிலர் கடன் கேட்பதை தவிர்ப்பதாகவும் கணேசன் தெரிவித்தார். இது பற்றி கணேசனிடம் கேட்டபோது, எனது ஊர் தஞ்சை மாவட்டம் பேராவூரணி. நான் துபாயில் 4 வருடம் பணியாற்றிவிட்டு வீட்டுக்கு வந்தபோது ஏஜெண்ட் ஒருவர் சிங்கபூரில் ரெஸ்டாரண்ட் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி ஏமாற்றமடைந்தேன். சிங்கபூரில் வேலை கடினமாக இருந்ததால் திரும்ப சொந்த ஊருக்கு வந்துவிட்டேன்.