உத்திரமேரூர், அக்.18: உத்திரமேரூர் பேரூராட்சி சார்பில் 18 வார்டுகளிலும் தூய்மை பணி நடந்து வருகிறது. தூய்மை காவலர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை கொண்டு அனைத்து வீடுகளுக்கும் சென்று டெங்கு காய்ச்சல் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். மேலும் பஸ் நிலையம், பேரூராட்சி வளாகம் உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது. இதைதொடர்ந்து, உத்திரமேரூர் பேரூராட்சி மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பட்டாங்குளம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நேற்று முன்தினம் நடந்தது. உத்திரமேரூர் பேரூராட்சி செயல் அலுவலர் லதா தலைமை தாங்கினார். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குட்டி முன்னிலை வகித்தார். பள்ளி துணை தலைமை ஆசிரியர் காமாட்சி வரவேற்றார்.