அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில் மகான் காயலாபாவா தர்காவின் 130வது ஆண்டு சந்தனக்கூடு விழா நடைபெற்றது. அரவக்குறிச்சியின் மேற்கே அடக்கமாகியுள்ள மகான் காயலாபாவாவின் தர்கா சந்தனக்கூடு விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். அதே போல இந்த ஆண்டும் 130வது ஆண்டாக சந்தனக்கூடு கொடியேற்றம் மற்றும் கொடி குதிரை ஊர்வலத்துடன் கடந்த 1ம் தேதி துவங்கியது. இதன் கடைசி நிகழ்ச்சியாக சந்தனக் கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.