உலக உணவு திருவிழா

வருசநாடு, அக்.17: உலக உணவு தினம் கொண்டாட்டம் வருசநாடு மீரா மழலையர் தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் மோகன்பாபு தலைமை வகித்து பேசினார். உதவி தலைமையாசிரியர் சோனியா முன்னிலை வகித்தார். பள்ளியின் நிர்வாகி பாண்டியம்மாள் செல்வம், மற்றும் அனைத்து ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் முற்காலங்களில் விளைவிக்கப்பட்ட அனைத்து வகையான கீரைகள், பருப்பு வகைகள், முளைவிட்ட பயறு வகைகள், கடலை உருண்டை போன்ற உணவுகள் சம்பந்தமாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. மேலும் உடல் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவுகளை எவ்வாறு உண்ணவேண்டும் அதை முறையாக பேணி பாதுகாப்பது எப்படி என்பது பற்றி கருத்தரங்கம் நடைபெற்றது.

Related Stories: