சிவகாசி, அக். 16: சிவகாசியில் நகராட்சி சுகாதார பணியாளர்கள் குடியிருப்பு அருகே, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதால், பெண்கள் அச்சமடைந்துள்ளனர். சிவகாசி நகராட்சியில் உள்ள சுகாதாரப் பிரிவில் 130க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 2014ல், நேரு காலனியில் 2 ஏக்கர் நிலத்தில் அரசு சார்பில் ரூ.1.40 கோடியில் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டது. முதலில் அடுக்குமாடி வீடுகள் கட்ட நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின், போதிய நிதி வசதி இல்லாததால், முதலில் 20 பணியாளர்களுக்கு மட்டும் அடுக்குமாடி வீடுகள் கட்டப்பட்டன. பின், படிப்படியாக அனைத்து சுகாதார பணியாளர்களுக்கும் வீடுகள் கட்டி தரப்படும் என அப்போது நகராட்சி நிர்வாகத்தினர் உறுதியளித்திருந்தனர். கட்டி முடிக்க பட்ட வீடுகள் சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.