பெட்ரோல், டீசல் விலையை ஏற்றாதே... கொடைக்கானல் அருகே சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவர் போக்சோவில் கைது

கொடைக்கானல், அக். 16: கொடைக்கானல் அருகே 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் வில்பட்டியை அடுத்த கோவில்பட்டியை சேர்ந்தவர் ராஜா (37). இவரது உறவினர் மகள் கோவில்பட்டி புலியூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி. நேற்று முன்தினம் காலையில் சிறுமி, அட்டுவம்பட்டியில் உள்ள ஆலயத்திற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ராஜா, அருகில் உள்ள புதருக்குள் சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து சிறுமி அலறினார்.சிறுமியின் அலறலை கேட்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். இதனை பார்த்த ராஜா அங்கிருந்து தப்பியோடினார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி அழுதவாறு கூறினாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கொடைக்கானல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

Related Stories: