திருவாரூர், அக்.16: திருவாரூர் மாவட்டத்தில் தொழில் முனைவோர் பயிற்சி பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,
படித்த இளைஞர்களுக்குரிய பயிற்சி அளித்து அவர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்குவதற்கு தமிழக அரசு சார்பில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த திட்டத்திற்கு நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்திற்கு என 16 தொழில்முனைவோர்களுக்கு மானியமாக வழங்குவதற்கு ரூ ஒரு கோடியே 56 லட்சத்து 80 ஆயிரம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப்படிப்பு மற்றும் ஐடிஐ போன்றவற்றில் தொழிற் பயிற்சி கல்வி தகுதி பெற்றிருப்போர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஒரு மாத காலம் வரையில் தொழில்முனைவோர் பயிற்சி அளித்து தொழில் திட்டம் தயாரிக்க உதவி செய்யப்படும். அதன் பின்னர் வங்கிகள் அல்லது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் கடன் பெற வழிவகை செய்யப்படும்.