திருத்துறைப்பூண்டி,அக்.16: திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக் கழகமாதிரிக் கல்லூரியில் திருவாரூர் மாவட்ட இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சி கல்லூரி முதல்வர் சக்திவேதலைமையில் நடைபெற்றது.திருத்துறைப்பூண்டி இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டி செயலாளர் எடையூர் மணிமாறன் வரவேற்றார். தீ தடுப்பு மற்றும் மீட்புபணிகள் துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை, பொது சுகாதாரத்துறை, 108 ஆம்புலன்ஸ் அமைப்பு, திருவாரூர் டெம்பிள் சிட்டி ரோட்டரிசங்கம், கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டம் ஆகியவற்றுடன் இணைந்து திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக் கழகமாதிரிக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுவோரை முறையாகஎவ்வாறுகாப்பாற்றுவது என்பது குறித்து நடைபெற்ற மீட்பு ஒத்திகைபயிற்சியில் மாணவ, மாணவியர்கள்மத்தியில் இயற்கை பேரிடர் காலங்களில் மக்கள்எவ்வாறு முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளில் பேரிடர் காலங்களில் சிக்கினால் எளிதாக எப்படி தப்பிப்பது, வீடுகளில் காஸ் சிலிண்டரால் ஏற்படும் ஆபத்துகளை தடுப்பது, மழை வெள்ளக்காலத்தில் நீரில் சிக்கியவர்களை எப்படி காப்பாற்றுவது, புயல் மழைக்காலங்களில் மின்கசிவு நேரத்தில் மக்கள் எவ்வாறு இருக்க வேண்டும், குழந்தைகள், விலங்குகளை எப்படி பாதுகாப்பது உள்ளிட்ட கருத்துக்களை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.