நாமக்கல், அக். 16: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த தினத்தையொட்டி, நாமக்கல்லில் தி ஸ்பெக்ட்ரம் அகாடமி மெட்ரிக் பள்ளி சார்பில், “கோகிரின்” என்ற மினி மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது.
ஐயப்பன் கோயிலில் தொடங்கிய மாரத்தான் போட்டியை, சேலம் கோட்ட ரயில்வே சீனியர் டிவிசனல் கமர்சியல் மேனேஜர் அரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.மோகனூர் ரோடு, முல்லை நகர் வழியாக பள்ளியை சென்றடைந்தது. இதில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பள்ளியின் தாளாளர் விக்னேஷ் மயில்சாமி, இந்திய மருத்துவ சங்கத்தலைவர் ரங்கநாதன், டாக்டர் எழில் செல்வன், பள்ளியின் முதல்வர் சுந்தரமகாலிங்கம் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் சீனியர் டிவிசனல் கமர்சியல் மேனேஜர் அரிகிருஷ்ணன் மரக்கன்றுகளை நட்டுவைத்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அப்துல்கலாமின் சிந்தனைகளை பகிர்ந்து கொண்டார்.