இலுப்பூர் அருகே ஓட்டலில் சாப்பிடும் போது தகராறு

புதுக்கோட்டை ,அக்.16: இலுப்பூர் அருகே ஓட்டலில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இலுப்பூர் அருகே உள்ள களிங்கிப்பட்டி ராப்பூசலை சேர்ந்தவர்கள் மோகன் (30), தனபால் (21) மற்றும் பன்னீர் (30). இவர்கள் அனைவரும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி சமத்துவபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது இலுப்பூர் அருகே உள்ள பாப்பான்வயல் பகுதியை சேர்ந்த குஞ்சையா (50) சுப்பிரமணி (37) மற்றும் ராஜேந்திரன் (34) ஆகிய மூவரும் அதே ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்பொழுது இரண்டு குரூப்பிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாய்தகராறு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதில் ஒரு குரூப்பை சேர்ந்த குஞ்சையா, சுப்பிரமணி, ராஜேந்திரன் ஆகிய மூவரும் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: