புதுக்கோட்டை ,அக்.16: இலுப்பூர் அருகே ஓட்டலில் சாப்பிடும் போது ஏற்பட்ட தகராறில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இலுப்பூர் அருகே உள்ள களிங்கிப்பட்டி ராப்பூசலை சேர்ந்தவர்கள் மோகன் (30), தனபால் (21) மற்றும் பன்னீர் (30). இவர்கள் அனைவரும் இலுப்பூர் அருகே உள்ள பாக்குடி சமத்துவபுரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட வந்துள்ளனர். அப்பொழுது இலுப்பூர் அருகே உள்ள பாப்பான்வயல் பகுதியை சேர்ந்த குஞ்சையா (50) சுப்பிரமணி (37) மற்றும் ராஜேந்திரன் (34) ஆகிய மூவரும் அதே ஓட்டலில் சாப்பிட சென்றுள்ளனர். அப்பொழுது இரண்டு குரூப்பிற்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாய்தகராறு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.