சிவகங்கையில் மதுவுக்கு எதிராக பரப்புரை

சிவகங்கை, அக். 15:  சிவகங்கையில் மனித நேய ஜனநாயக கட்சி சார்பில் மதுவுக்கு எதிரான பரப்புரை நடந்தது. மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்.2முதல் அக்.20வரை இக்கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மதுக்கு எதிரான பரப்புரை நடந்து வருகிறது. விளிம்பு நிலை மக்களிடம் மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நடைபெறும் இப்பரப்புரை சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை நேருபஜாரில் மாநில துணை செயலாளர் சைபுல்லா தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் சையதுஅபுதாகீர், நகர செயலாளர் சேக்பக்ருதீன், நிர்வாகிகள் அல்லபிச்சை, பைசல், எமானி, அசார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: