நாமக்கல்லில் மினி மாரத்தான் போட்டி

நாமக்கல், அக். 15:  நாமக்கல்லில், காவலர் வீரவணக்க நாளையொட்டி நேற்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 80 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட கலெக்டர் மெகராஜ், மற்றும் எஸ்.பி அருளரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர். மோகனூர் ரோடு அய்யப்பன் கோயலில் இருந்து தொடங்கிய போட்டி, டிரினிட்டி கல்லூரியில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் டிஸ்பி காந்தி, இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்ஐக்கள் பூபதி, தங்கம் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். காவலர் வீரவணக்க நாள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும் 21ம்தேதி நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: