விருத்தாசலம், அக். 15: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகண்டியங்குப்பம் நுண்ணுயிர் செயலாக்க மையத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான குப்பை அரைக்கும் இயந்திரத்தை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சுகாதார அலுவலர் குமார் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் பாலு தலைமை தாங்கி இயந்திரத்தை துவக்கி வைத்து பேசியதாவது, விருத்தாசலம் நகராட்சியில் உருவாகும் குப்பைகள், காய்கறி கழிவுகள் உள்ளிட்ட மக்கும் கழிவுகளை நுண்ணுயிர் செயலாக்க மையத்திற்கு கொண்டுவந்து குப்பை அரைக்கும் இயந்திரத்தில் போட்டு அரைத்து நுண்ணுயிர் தவிடு கலந்து அங்கு உள்ள தொட்டியில் வைக்கப்பட்டு வருகிறது. பின்பு 21 நாட்களுக்கு பிறகு அவைகள் மக்கி உரமான பிறகு ஒரு டன் ஆயிரம் ரூபாய் விகிதத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.