நாகர்கோவில், அக்.15: தொடக்க பள்ளிகளில் 3, 4, 5ம் வகுப்புகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழக சட்டசபையில் 2019-20ம் கல்வி ஆண்டு பள்ளி கல்வித்துறையின் மானிய கோரிக்கையில் பள்ளி கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட அறிவிப்பில் ‘மாணவ மாணவியரின் உடல் திறனை வளர்க்கும் பொருட்டு உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதே போன்று தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு அவர்களுடைய விளையாட்டு திறனை கண்டறிந்து ஊக்குவிக்கும் பொருட்டு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும்’ என்று அறிவித்திருந்தார்.