மேலூர், அக். 10: மேலூரில் குழாய் உடைப்பால் காவிரி கூட்டு குடிநீர் விரயமாவது தொடர்கதையாக உள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலூர் நகராட்சி மற்றும் ஊராட்சிகளுக்கு காவிரி கூட்டு குடிநீரே இதுவரை கைகொடுத்து வருகிறது. நகராட்சியை சுற்றி ஆழ்துளை குழாய்களில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவு மிக, மிக குறைந்து போன நேரத்தில் இந்த காவிரி கூட்டு குடிநீர்தான் இப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.இந்த காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்துவதற்காக மேலூர் காந்திஜி பூங்கா ரோட்டில் தனி அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அதிகாரிகள் தினசரி குழாய்களில் உடைப்புகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அது நடைபெறுவதே இல்லை. நாளிதழ்களில் செய்தி வெளியான பிறகே அந்த இடத்திற்கு சென்று அவற்றை சரிசெய்கின்றனர்.