கரூர், அக்.10: தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள அனைத்துவகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிதோறும் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தவாரத்திற்குரிய தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (11ம்தேதி) காலை 11மணிக்கு நடைபெறஉள்ளது. இம்முகாமில் 10, 12ம்வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, கணினிப்பயிற்சி, பட்டம்முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுயக்குறிப்புகளுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளலாம். தனியார் துறை நிறுவனங்களும் கலந்துகொண்டு தங்களுக்குத் தேவையான நபர்களை அவர்களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வருகைபுரிந்தோ தேர்வு செய்துகொள்ளலாம்.