அம்பை, அக். 10: கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள தெற்குப்பாப்பான் குளம், இந்திரா நகரை சேர்ந்தவர் முருகன் (55). இவரது மகள் மாலதியை அதே பகுதியில் வசிக்கும் சிவனுப்பாண்டியன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் இவர்களது இரு குடும்பத்தினர் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இதனிடையே சிவனுபாண்டியன் சகோதரர் சேகர் (27), முருகன் வீட்டிற்குச் சென்று தகராறு செய்து அவதூறாகப் பேசியுள்ளார்.