பெரும்புதூர், அக்.10: மர்ம காய்ச்சலால் சிறுமி பலியான சம்பவத்தை ெதாடர்ந்து பெரும்புதூர் பேரூராட்சியின் 15 வார்டுகளிலும் டெங்கு தடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் சுகாதார துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில், ஊராட்சியில் மழைநீர் தேங்கி கொசு தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் ஏராளமான மக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.இந்நிலையில் பெரும்புதூர் பேரூராட்சி நுஸ்ரத் நகரில் மெகரின் பானு (8) என்ற சிறுமி, காய்ச்சல் ஏற்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்தாள். இதையடுத்து கலெக்டரின் உத்தரவுபடி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில்குமார் மேற்பார்வையில் பெரும்புதூர் பேரூராட்சி 15 வார்டுகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.