மன்னார்குடி, அக்.10: மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறையின் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இளம் மேலாண் வல்லுநர்களுக்கான மனிதத் திறன்கள் மேம்பாடு குறித்த ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் (பொ) ரவி தலைமை வகித்தார். கருத்தரங்கில் சென்னை லயோலா கல்லூரி சமூகவியல்துறை உதவி பேராசிரியர் அருள் காமராஜ் கலந்து கொண்டு வணிக நிர்வாகவியல் துறையில் பயிலும் மாணவர்கள் எவ்வாறு தங்கள் திறன்களை மேம்படுத்திக் கொண்டு வருங்கால சந்ததியினருக்கு வேண்டிய நிர்வாகத் திறன்களை முன் கணித்து, முக்கிய முடிவுகளை மேற்கொள்வதற்கான செயல்முறை விளக்கங்களை அளித்தார்.