கந்தர்வகோட்டை, அக்.10: கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியில் வயல்வெளியில் உள்ள மோட்டாரிலிருந்து காப்பர் வயர்களை திருடி விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர். கந்தர்வகோட்டை அருகே தச்சங்குறிச்சியை சேர்ந்தவர் சூசை மகன் தேவதாஸ்(48). விவசாயி. இவர் தனக்கு சொந்தமான 4 ஏக்கர் விளைநிலத்தில் விவசாய பணிக்காக மோட்டார் அமைத்துள்ளார். அதிலிருந்த காப்பர் வயர்களை அப்பகுதியை சேர்ந்த வசந்தா என்பவரின் கணவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த நாகராஜ் (32) மற்றும் அவரது கூட்டாளி ரஞ்சித்(22) ஆகியோர் திருடி விற்றுள்ளனர்.